Description
மிகச் சிறந்த நவீன தருக்க இலக்கிய வரிசைகளில் தன் இடத்தை ஒரே முயற்சியில் தாவிப் பிடிந்த நூல் என்று இதனைக் கருத வேண்டும்.
-மவ்னிங் ஸ்டாண்டர்ட்
1970ஆம் ஆண்டு வெளியான ஒருசில மாதங்களில் 80 ஆயிரம் பிரதிகள் விற்பனையான இந்நூலில் பால்களுக்கு இடையிலுள்ள உறவு முறைகள் பற்றி முன்னணியான, மகத்தான, அறிவு சார்ந்த புரட்சிகரமான பகுப்பாய்வினைச் செய்துள்ளார் கேற் மில்லற், அந்த ஆய்வு, நம்முடைய வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் எவ்வாறு ஒரு தந்தைவழியாட்சியின் ஓரவஞ்சனை செயல்பட்டு வந்தது என்பதை வெளிப்படுத்தியது. அது நம்முடைய புராணங்களிலும் மதத்திலும் சமூக முறைமைகளிலும், மிக முக்கியமாக நம் இலக்கியத்திலும் செயல்பட்டு வந்ததென்பதைப் புலப்படுத்தியது. ஒரு பெண்ணிய பிரகடனம் என்ற அளவில், அதன் வல்லமையை இந்நூல் தக்கவைத்துள்ளது. மட்டுமின்றி அது மிக நேர்த்தியாக சிந்தித்து அருமையாக எழுதப்பட்ட கலாச்சார ஆய்வு, வரலாற்றுப் படைப்பு என்ற தகுதிகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Reviews
There are no reviews yet.