Description
முனைவர் மா சாலமன் பெர்னாட்ஷா வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றியவர், அவர் “இந்தியக் கலை வரலாறு” எனும் நூலை எழுதியுள்ளார். இவர் தொழிற்சங்கவாதி, பேச்சாளர், எழுத்தாளர் ஆராய்ச்சியாளர், சமூகப் பணியாளர், மனித உரிமை, சுற்றுச்சூழல் ஆர்வலர் போன்ற பன்முகங் கொண்டவர்.
பேராசிரியர் பொ.முத்துக்குமரன் கணிதப் பேராசிரியர். இவர் கலை, வரலாறு, இலக்கியம், சதுரங்க விளையாட்டு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ‘சதுரங்களில் பயணம்’, ‘இந்தியக் கலை வரலாறும்’. இவரது படைப்பாகும்.
‘இந்திய இஸ்லாமியக் கலை வரலாறு’, என்பது இந்தியக் கலையையும், சிறப்புகளையும் இவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் ஒரு நூல் இதுவரை விளக்கியிருக்குமா என்கின்ற கேள்வி இந்நூலைப் படித்த பிறகு ஏற்படும். ஆய்வுக்காகப் படிக்கும் நூலே தவிர, ஓய்வுக்காகப் படிக்கிற நூலல்ல இது.
பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி படங்களோடு இந்த நூலையே பிரமாண்டமான வடிவத்திலும், சரிகை வேலைப்பாட்டின் நுட்பத்துடனும் பேராசிரியர்கள் சாலமன் பெர்னாட்ஷாவும், முத்துக்குமரனும் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்நூல் ஓர் அரிய பெட்டகம்.”
வெ.இறையன்பு

Reviews
There are no reviews yet.