Description
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் கிர்கீஸ் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘குல்சாரி’ நாவல்,அவரின் ஆகச்சிறந்த படைப்பாக கொண்டாடப்படுகிறது. குல்சாரி என்ற வயதான குதிரை தனபாய் என்ற முன்னாள் போர்வீரன் மற்றும் அவனது நண்பன் கோரோ ஆகிய மூவரிற்கும் இடையிலான ஊடாட்டங்களாக இந்நாவல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக நாட்டுப்புற வழக்காறுகளை சமகால சமுக-பண்பாட்டுச் சூழலிற்கு ஏற்ப மறுவுருவாக்கம் செய்யும் ஐத்மாத்தவின் கதைகளில் புலப்படுவதுபோல தொன்மங்களும் புராணங்களும் இழையோடும் இக்குறுநாவல் அன்பு, அற்பணிப்பு மற்றும் நட்பை ஆழமாய் நிகழ்த்திக்காட்டுகிறது.

Reviews
There are no reviews yet.