Description
போராடுதல் என்ற கருத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்தல், குறிப்பாக சகமனிதருடன் வாழ்தல் என்பதன் அடிப்படைகள் என்னவாக இருக்க முடியும் என்பது குறித்து பாமா இக்கதைகளின் வழி யோசிப்பதாகக் கொள்ளலாம். சில பொழுதுகள், கணங்கள், சில காட்சிகள் என்று நுணுக்கமாகச் சிலவற்றைப் பதிவு செய்வதால் சில அனுபவங்களில் தெளிவு பெற வாய்ப்புள்ளள என்ற ரீதியில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சில கதைகளை வித்தியாசமாகப் படைத்துள்ளார் என்று கூடச் சொல்லலாம்.
கல்வி, குழந்தைகள், சாதி சமுதாய உளவியல், அன்றாட வாழ்வில் சாதியத்தைத் தொலைத்தல் இவற்றில் அக்கறையுடையவர்கள் இந்தத் தொகுப்பை விரும்பிப் படிப்பர்.
-வ. கீதா

Reviews
There are no reviews yet.