Description
நான் பிறந்த சாதி தீண்டப்படாதது நான் விரும்பிய போராட்டம் ஒடுக்கப்பட்ட போராட்டம் ஆனால் அவை இரண்டுமே அற்புதமான வசந்தங்கள்! அவை ஏன் தீண்டப்படாதவை ஆயின? என் கேள்வியே அங்கிருந்துதான் ஆரம்பமாயிற்று
வரலாறு எவ்வளவோ படித்தேன். டி.டி. கொசாம்பி, ரொமில்லா தாப்பர், மஜும்தார்.. என்று எத்தனையோ ஆயிரம் பக்கங்கள் படித்தேன். அவர்கள் புதிய அம்சங்களைக் கூறியிருக்கிறார்கள். புதிய கோணங்களைக் காட்டியிருக்கிறார்கள். அவற்றிலும் ஏதோ ஒன்று காணப்படவில்லை. என் பக்கம் தென்படவில்லை. அதைத்தான் தேடினேன். அந்தத் தேடலே ‘தீண்டாத வசந்தம்’. சரித்திரத்தை என் முன்னோர்களின் பார்வையை கொண்டு பார்த்தேன்.
இது போன்ற முயற்சி தெலுங்கு இலக்கியத்தில் இதுதான் முதல் முயற்சி எனக் கருதுகிறேன்.
இந்த நாட்டிலே வர்க்கம் இருக்கிறது. அதன் பக்கத்திலே சாதியும் இருக்கிறது. இங்கே காற்றுக்கும், பாசனக் கால்வாய்களுக்கும், விளையும் பூமிக்கும். கோவிலுக்கும், குளத்திற்கும், பள்ளிக்கூடத் திற்கும், ஊர் பொது இடத்திற்கும். உண்ணும் உணவுக்கும், குடிக்கும் தண்ணீருக்கும். உடுத்தும் உடைக்கும். பேசும் மொழிக்கும். இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அரசுக்கும், அதன் சட்டத் திற்கும், நீதிக்கும், நீதிமன்றத்திற்கும், பிணத்திற்கும், மயானத்திற்கும், சாமிக்கும், பேய்க்கும்கூட சாதி இருக்கிறது.

Reviews
There are no reviews yet.