Description
திரு. ஆர்.எஸ். சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர். இதன் முன்னர் டோரன்டோ மற்றும் டில்லி பல்கலைக்கழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்றுப் பாடம் போதித்துப் பெரும் புகழ்பெற்றவர். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவராகத் திகழ்ந்த நற்பெருமையும் இவரைச் சேரும். “பண்டைக்கால இந்தியா” என்பது அவரது பேனா முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ்பெற்ற நூல், பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால், ஆன்றோர்களால், சான்றோர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்ட இந்த அரிய நூலுக்கு அளிக்கப் பட்டிருந்த அங்கீகாரத்தை இந்திய அரசு 1977இல் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. எனினும் தவறு உணரப்பட்டு, 1980ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

Reviews
There are no reviews yet.