Description
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல், வற்றாத அறிவு ஊற்று. நுண்மான் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள். நாள்தோறும் எழுதிய வண்ணமிருந்தவர். அவர் எழுதிய அறிவார்ந்த கட்டுரைகள் தாங்கி ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாத-வார-நாளிதழ்கள் பல வெளிவந்தன.
மார்க்சிய-லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப்பெற்று, இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப் பொருள் வகைகளையும், சமயங்களையும் குறித்து நூல்களாக வடித்த இவரது இந்நூல் காரணகாரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன் பல்வேறு விவாதக் களங்களையும் உருவாக்கிச் செல்கிறது.

Reviews
There are no reviews yet.